×

நல்லம்பள்ளி சந்தையில் மண் பானை விற்பனை ஜோர்

தர்மபுரி, டிச.19: நல்லம்பள்ளி சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை விற்பனை ஜோராக நடந்தது. நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தடங்கம், ஏ.ஜெட்டிஅள்ளி, லளிகம், நார்த்தம்பட்டி, பாளையம்புதூர், சாமிசெட்டிப்பட்டி, ஏலகிரி, சிவாடி, கெங்கலாபுரம் உள்ளிட்ட 32 ஊராட்சிகளிலிருந்து பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். நேற்று கூடிய சந்தையில், நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். காய்கறிகள், மளிகை சாமான்கள், தானியங்கள், மசாலா பொருட்கள், புத்தாடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், மண் பானை விற்பனை களை கட்டியது. மண் பானை ₹50 வரையும், மண் அடுப்பு  60க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, செங்கரும்பு விற்பனை அமோகமாக இருந்தது. ஒரு ஜோடி கரும்பு ₹80க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags : Soil pot soldier ,Nallamalli ,
× RELATED நல்லம்பள்ளி அருகே திமுக தெருமுனை பிரசார கூட்டம்