×

மார்கழி மாதம் பிறப்பு தர்மபுரியில் கடும் பனிப்பொழிவு

தர்மபுரி, டிச.18: மார்கழி மாதம் பிறந்த நிலையில், தர்மபுரியில் பனிப்பொழிவால் கடுமையான குளிர் நிலவுகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து ேபானதால், விவசாய சாகுபடி குறைந்துள்ளது. மேலும், நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மார்கழி மாதம் பிறந்தது. இம்மாதத்தில் அதிக பனிப்பொழிவால் அதிகாலையில் கடுமையான குளிர் காணப்படும். கடந்த நவம்பர் மாதம் அதிக பட்சமாக 19 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.  

இந்நிலையில், மழை வெகுவாக குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக குளிர் மேலும் அதிகரித்துள்ளது. நேற்று தர்மபுரி மாவட்டத்தில் வெப்பநிலை 16.5 டிகிரியாக குறைந்தது. மாலை 6 மணிக்கே இரவு 9 மணி போல் காட்சி அளிக்கிறது. மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து குளிர் அதிகரித்துள்ளது. பனியால் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் 8 மணிக்கு மேல்தான் வருகின்றனர்.


Tags : snowfall ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி