×

சீட்டு பணத்தை மீட்டுதரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பூர், டிச.18: திருப்பூரில், சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக் கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருப்பூரில், சீட்டு மோசடியில் ஏமாந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், மேட்டுபாளையம் பஸ் ஸ்டாப் ராம்மூர்த்தி நகர் பகுதியில் அக்ரோபாம் இண்டியா என்கிற தனியார் சீட்டு கம்பெனியை பிரவீன் என்பவர் நடத்தி வந்தார்.அவரிடம் திருப்பூர் மாநகர பகுதியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதம் ரூ.300 முதல் ரூ.2000 வரை 5 வருடத்திற்கு மேல் செலுத்தி வந்தோம். பின்னர், சீட்டு பணத்தை கடந்த பல மாதங்களாக கேட்டு வந்த நிலையில் தவணை சொல்லி வந்தனர்.

இதனையடுத்து, கடந்த மே மாதம் முதல் அவர்களது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, பிரவீன் மற்றும் அவரது நண்பர் கிஷோர் ஆகியோரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும், என கூறி உள்ளனர்.

Tags : petitioner ,collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...