×

சிக்கண்ணா கல்லூரி முன்னாள் மாணவர்கள் ரூ.40 ஆயிரம் நிவாரணம்

திருப்பூர், டிச.18: கடந்த நவ.16ம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகை, திருவள்ளுவர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின. லட்சக்கணக்கான தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1994-97 கல்வி ஆண்டில் படித்த மாணவர்கள் சார்பில், முன்னாள் மாணவர்கள் 5 பேர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள குறிச்சிமுனை கிராமத்திற்கு சென்று, அப்பகுதி மக்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கொசு வலை மற்றும் தார்பாய் ஆகியவற்றை  நேரிடையாக வழங்கியுள்ளனர்.

Tags : Lakshmana College ,
× RELATED சிக்கண்ணா கல்லூரி பட்டமளிப்பு விழா