×

மார்த்தாண்டம் அருகே குடிநீர் கேட்பது போல் பெண்ணிடம் செயின் பறிப்பு

மார்த்தாண்டம், டிச.16:  மார்த்தாண்டம் அருகே நெல்வேலி வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் மேரி (65). நேற்று இவர் வீட்டருகே உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மேரியிடம் நல்ல தண்ணீரா? குடிக்கலாமா? என கேட்டுள்ளனர். அவர்கள் மீது பரிதாபப்பட்ட மேரி உடனே குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது மேரி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு அந்த வாலிபர்கள் பைக்கில் தப்பிச்சென்றனர்.

இது குறித்து அவரது மருமகன் ஜெயதாஸ் மார்த்தாண்டம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சந்தேகத்திற்கிடமான பைக்குகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரும் சோதனை நடத்தினர். எனினும் யாரும் பிடிபடவில்லை. இதையடுத்து போலீசார் செயின்பறிப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marthandam ,
× RELATED மார்த்தாண்டம் அருகே போதையில் கடும்...