×

ஒன்றரை கிலோ கஞ்சா: 2 பேர் கைது

திண்டுக்கல், டிச. 4: திண்டுக்கல் பஸ்நிலையத்தில் ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு சப்இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த லிபின்ராஜ் (24), திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்ற பேய் லாரன்ஸ் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா கொடுத்த சின்ன அய்யங்குளத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : kanja ,
× RELATED சமூக விரோதி படத்துக்கு மறுதணிக்கை