×

கல்லால் தாக்கி பிச்சைக்காரரை கொன்ற பெயிண்டர் கைது

கோவை, டிச.4: கோவையில் கல்லால் தாக்கி பிச்சைக்காரரை கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். கோவை பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்தூரை அடுத்த தனியார் கல்லூரி அருகே உள்ள ஒரு ஆட்டோ கேரேஜ் முன்பு கடந்த 28ம் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்தம் சிந்திய  நிலையில் கிடந்தார். அதே பகுதியை சேர்ந்த சிலர் உயிருக்கு போராடிய அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், காயம்பட்டவர் அதே பகுதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர், அந்த நபரை கல்லால் தாக்கியவர் குனியமுத்தூர் அருகே மூவேந்தர் நகரை சேர்ந்த பெயிண்டர் செல்வம் (37).

 எனத் தெரியவந்தது.இவர் கடந்த 28ம் தேதி குடிபோதையில் பாலக்காடு சாலை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே நடந்து வந்துள்ளார். அப்போது சாலையில் படுத்திருந்த பிச்சைகாரரின் கால்களை மிதித்தார். இதனால் அவர், செல்வத்தை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த செல்வம், அங்கிருந்த கல்லை எடுத்து பிச்சைக்காரரின் தலையில் தாக்கிவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் செல்வத்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Painter ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை