×

வெள்ளாற்றில் அனுமதி இல்லாத இடத்தில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

செந்துறை, டிச. 4:  தளவாய் வெள்ளாற்றில் அனுமதி இல்லாத இடத்தில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஆலத்தியூர் ஊராட்சியில் கடந்த மாதம் 21ம் தேதி புதிதாக மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அரசு மணல் குவாரி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தளவாய் ஊராட்சி சேந்தமங்கலம் பகுதி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதி பெறாத இடத்தில் மணல் அள்ளியதால் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மாட்டு வண்டிகளை சிறைபிடித்தனர். மேலும் வெள்ளாற்றில்  இருந்து மாட்டு வண்டிகள் வெளிவரும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தளவாய் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சரத்குமார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து மாட்டு வண்டிகளும்
விடுவிக்கப்பட்டன.

Tags : road ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து