×

பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

இடைப்பாடி, டிச.4:  இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. சங்ககிரி உட்கோட்டம் இடைப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, பூலாம்பட்டி, மகுடஞ்சாவடி, தேவூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. முகாமிற்கு சங்ககிரி டிஎஸ்பி அசோக்குமார் தலைமை தாங்கி மனுக்களை வாங்க இருந்தார். ஆனால், மதியம் வரை அவர் வரவில்ைல. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் இடைப்பாடி செந்தில், மகுடஞ்சாவடி சசிகுமார், வீரம்மாள் மற்றும் எஸ்ஐக்கள் வெங்கடாஜலம், பிரகாஷ், செந்தில்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர். குடும்ப பிரச்னை, அடிதடி தகராறு, நிலப்பிரச்னை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. சேலத்தில் நடந்த அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள டிஎஸ்பி அசோக்குமார் சென்றதால் அவரால் முகாமில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.

Tags : Public Defender ,
× RELATED அரசு பணியாளர்கள், பொதுமக்கள்...