ஜெயங்கொண்டம், நவ.30: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் படிப்பை இடையில் நிறுத்தியவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலை வாய்ப்புமுகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இளம் வயதில் குடும்ப சூழல் காரணமாகவோ,பிற சூழல் காரணமாகவோ படிப்பினை தொடரமுடியாமல் போனவர்கள் (8 வகுப்பிலிருந்து பட்ட படிப்பு வரை) இடை நின்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் சென்னை,கோவை,பெங்களூர்,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏராளமானோர் தேர்வாகி பணி முன் பயிற்சிக்கான ஆணையினை பெற்று சென்றனர். இதில் அரியலூர்,உடையார் பாளையம்,ஜெயங்கொண்டம்,ஆண்டிமடம், செந்துறை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொன்டனர்.