×

மணப்பாறையில்பஸ்சில் ஏற முயன்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மணப்பாறை, நவ.29: மணப்பாறை பேருந்து நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்தவர் முருகாயி (65). இவர் நேற்று மணப்பாறை சந்தைக்கு வந்து விட்டு வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக மணப்பாறை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த  தனியார் பேருந்தில் மூதாட்டி ஏற முயன்றபோது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதனால் மூதாட்டி கதறி அழுதார். தகவலறிந்து விரைந்து வந்த மணப்பாறை போலீசார் மூதாட்டியிடம் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

இச்சம்பவம் பேருந்தில் இருந்த சக பயணிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மனைவியை தாக்கிய கணவன் கைது
திருச்சி, நவ. 29: திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுசல்யா (26). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வந்த நிலையில் 2வதாக பெயிண்டர் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தினமும் குடித்து விட்டு வரும் ரவீந்திரன், சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதுகுறித்து கவுசல்யா, உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிந்து ரவீந்திரனை கைது செய்தனர்.

Tags : anesthetic ,
× RELATED தொடர்ந்து 7 நாட்களாக போக்கு காட்டிய...