×

காவல்துறை சார்பில் பாதுகாப்பான பயணம் குறித்து டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

திருச்செங்கோடு, நவ.29: திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் 108 ஆம்புலன்ஸ், டூரிஸ்ட் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு, பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி  சண்முகம் தலைமை தாங்கினார். புறநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் முன்னிலை  வகித்தார். கூட்டத்தில்  100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கி அதில் இருந்த 6 பேர் உயிரிழந்ததை  சுட்டிக்காட்டி, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள  வேண்டும் என்றார். மேலும், டூரிஸ்ட் டிரைவர்கள் வெளியூர் பயணங்கள் செல்லும் போது, தாங்கள் செல்லும் இடம் மற்றும் யாருக்காக சவாரி செல்கிறார்கள் என்பது  குறித்த தகவலை, நம்பிக்கைக்கு உரியவர்களிடம் தெரிவித்து செல்ல வேண்டும் என்றும், ஆட்டோ டிரைவர்கள் செல்லும் பகுதிகளில் ஏதேனும் பிரச்னைகள் தென்பட்டால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.  

Tags : drivers ,
× RELATED சுரங்கப்பாதைகளில் தண்ணீர்...