×

ஒட்டப்பட்டியில் பூங்காவை சீரமைக்க மக்கள் கோரிக்கை

தர்மபுரி, நவ.29:  தர்மபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில், ஒட்டப்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள பூங்காவை, அந்த பகுதியில் உள்ளவர்கள் மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்ளவும், இளைப்பாறவும் பயன்படுத்தி வந்தனர். மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ ஊஞ்சல், சறுக்கு, சீசா போன்ற விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பூங்கா, சரிவர பராமரிக்கப்படாததால், செடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் உள்ளது. மேலும், அனைத்து விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி விட்டது. புதர் மண்டி காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. இதனால் இந்த பூங்கா தற்போது பயன்பாடின்றி கிடக்கிறது. இதையடுத்து, குப்பை கொட்டும் இடமாக பூங்கா மாறி வருகிறது. எனவே, இந்த பூங்காவை சீரமைத்து விளையாட்டு உபகரணங்களையும் புதிதாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : park ,
× RELATED 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன்...