×

விபத்துகளை தடுக்க குண்டல்பட்டி அருகே மேம்பாலம் கட்ட வலியுறுத்தல்

தர்மபுரி, நவ.29: குண்டல்பட்டி அருகே விதி மீறி சாலையை கடந்து  செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலையில் குண்டல்பட்டி அருகே சந்திப்பில் அடிக்கடி வாகனங்களால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தர்மபுரியில் இருந்து செல்லும் வாகனங்கள், குண்டல்பட்டி சந்திப்பில் சென்று பெங்களூரு மார்க்கமாக செல்ல மாவட்ட நிர்வாகம் நிரந்தர தடை விதித்தது. மேலும், சாலையில் தடை கற்கள் வைத்து அடைக்கப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பழைய தர்மபுரி, சவுளூர் வழியாக பெங்களூரு பைபாஸ் சாலையை அடைந்து செல்கின்றன.

இதன் மூலம் குண்டல்பட்டி சந்திப்பில் விபத்துக்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூடப்பட்ட குண்டல்பட்டி சந்திப்பில், இருசக்கர வாகனங்கள் விதிகளை மீறி செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குண்டல்பட்டி பைபாஸ் சாலையை கடக்க மேம்பாலம் கட்ட வேண்டும். சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை, உயரமாக வைத்து இருசக்கர வாகனங்கள் குண்டல்பட்டி சந்திப்பில் விதிகளை மீறி செல்ல முடியாத அளவிற்கு, தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,Kundalpatti ,
× RELATED கிரேன் கயிறு அவிழ்ந்து விழுந்து தொழிலாளி பலி..!!