×

விஏஓக்கள் போராட்டத்தால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு

முஷ்ணம், நவ. 29: ஆன்லைன் மூலம் சான்றுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் ஒரே அரசாணை மூலம் வழங்க வேண்டும். பணியிடங்களை மறுசீரமைப்பு, அலுவலகத்தில் அடிப்படை வசதி, கணினி வழி சான்று வழங்கும் செலவு தொகையை வழங்க வேண்டும். இ-அடங்கலை கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டமாக நேற்று கணினி மூலம் சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்யவில்லை. இதனால் பட்டா மாற்றம், வாரிசு சான்று, விதவை சான்று, இருப்பிடம், வருவாய், முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றுகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் வரும் 5ம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டமும், 7ம் தேதி சிறுவிடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டமும், 10ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

Tags : VOs ,strike ,civilians ,
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...