×

கிராமிய, தெருக்கூத்து கலைஞர்கள் கைகோர்ப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிவாரண பொருட்கள் சேகரிப்பு

கிருஷ்ணகிரி, நவ.28: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பர்கூர் ஒன்றிய தெருக்கூத்து கலைஞர்கள், கலை நிகழச்சிகள் மூலம் நிவாரண பொருட்கள் சேகரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றிய கிராமிய கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் ஒன்றிணைந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு வேடங்கள் தரித்து வீதி வீதியாக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிவாரண பொருட்களை சேகரித்தனர். அதேபோல், நாடகங்கள் அரங்கேற்றியும் நிதி வசூலித்தனர். பர்கூர் டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட், ஜெகதேவி சாலை, பஸ் நிலையம், மெயின் ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக தெருக்கூத்து கலைஞர்கள் சென்று நிவாரண பொருட்கள் சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்குமார், வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : street artists ,
× RELATED கொரோனாவால் திருவிழாக்களுக்கு தடை...