பாலக்ேகாடு, நவ.28: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் ேஷர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தினசரி 300க்கும் மேற்பட்ட நகர பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் இருந்து விதி முறையை மீறி தும்பலஅள்ளி, பெல்ரம்பட்டி, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் ேஷர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஷேர் ஆட்டோக்களை விதி முறைகளை மீறி, பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்துவதால், பஸ்கள் இயக்க டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளருக்கும், பாலக்கோடு ேபாலீசாருக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கமால் மெத்தனப்போக்குடன் உள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ேஷர் ஆட்டோக்களை பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நிறுத்த வேண்டும். விதிமீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது, மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.