×

மொரப்பூர் பகுதியில் வெண்டை விலை உயர்வு

அரூர், நவ.28: மொரப்பூர் பகுதியில் வெண்டை விளைச்சல் குறைந்ததால், கிலோ ₹10க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், கம்பைநல்லூர், நல்லம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் அதிகமாக வெண்டை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும், வெண்டை கம்பைநல்லூர், மொரப்பூர், தர்மபுரி ஆகிய இடங்களில் மொத்த வியாபாரிகள் மண்டிகள் வைத்து கொள்முதல் செய்து, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிற்கும் விற்பனைக்கு அனுப்பு வைக்கின்றனர். கடந்த மாதம் போதுமான மழை இருந்தால், வெண்டை விளைச்சல் அதிகரித்தது. இதனால் கிலோ ₹6க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக போதிய மழை இல்லாததால், வெண்டை விளைச்சல் குறைந்தது. இதனால் விலை அதிகரித்து நேற்று கிலோ ₹10க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : region ,Morpore ,
× RELATED தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை...