×

காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து வழங்கல்

காரிமங்கலம் நவ.28:  காரிமங்கலம் அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோயாளிகளுக்கான  இன்சுலின் ஊசி மருந்து மீண்டும் வழங்கப்படுகிறது. காரிமங்கலம்- மொரப்பூர் ரோட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல், சர்க்கரை நோயாளிகளும் இம்மருத்துவமனைக்கு வந்து, இன்சுலின் ஊசி போட்டு, சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, மருத்துவமனையில் இன்சுலின் மருந்து இல்லாததால், சர்க்கரை ேநாயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். எனவே இன்சுலின் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த செய்தி, கடந்த 9ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மீண்டும் இன்சுலின் ஊசி போடப்பட்டு வருகிறது.

Tags : Government Hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...