×

பாரதிபுரம்- அன்னசாகரம் வழியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

தர்மபுரி, நவ.28:  பாரதிபுரத்தில் இருந்து அன்னசாகரம் செல்லும் வழியில் பாதியில் நிறுத்தப்பட்ட தார்சாலை பணியை, விரைவுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரத்தில் உள்ள 32 மற்றும் 33வது வார்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அன்னசாகரத்தில் இருந்து சேலம் மெயின்ரோடு வரை இதுவரை தார்சாலை அமைக்கப்படாமல், மண் சாலையாக இருந்து வந்தது. தார்சாலை அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சியிடமும் பலமுறை மனு கொடுத்தனர். இந்நிலையில், கடந்த ஒராண்டிற்கு முன்பு பாரதிபுரம்- அன்னசாகரம் வரை தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 1 மீட்டர் வரை மட்டும் தார்சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள சுமார் அரை கிலோ மீட்டர் வரை, சாலை அமைக்கவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பாரதிபுரத்தில் இருந்து அன்னசாகரம் செல்லும் வழியில் தார்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் மண் சாலைகளில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றனர்.

Tags : road ,Bharathipuram- Annasakagam ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை