புதுச்சேரி, நவ. 28: புதுவை, லப்போர்த் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ஜெயின் (36). வட்டிக் கடை வைத்துள்ள இவர் சம்பவத்தன்று நகர பகுதியில் உள்ள ஒருகடைக்கு பால் வாங்க சென்றார். அப்போது கண்டாக்டர் தோட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர்கள் கார்த்திக், சுப்பிரமணி ஆகியோர் ராஜ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுகுறித்து ராஜ்குமார் ஜெயின் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிந்து கார்த்திக், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.