×

அரியாங்குப்பத்தில் முருகர் கோயில் உண்டியல் உடைப்பு

புதுச்சேரி, நவ. 27:  அரியாங்குப்பத்தில் சிவசுப்ரமணியர் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் காளாண் தோட்டம் பகுதியில் சிவசுப்ரமணியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சமீபத்தில்தான் சூரசம்கார விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பக்தர்கள் தங்களது காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்தவுடன் அர்ச்சகர் கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் பூஜைகள் செய்ய கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதை கண்டதும் அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சூரசம்கார விழா முடிந்த நிலையில் கோயில் உண்டியலில் காணிக்கை அதிகம் இருக்கும் என்பதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசைகட்டி இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Murugan ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்