பென்னாகரம், நவ.23: ஒகேனக்கல்லில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் தரமான சாலை மீது, மீண்டும் சீரமைத்து அதிகாரிகள் பணத்தை கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒகேனக்கல்- பென்னாகரம் செல்லும் பிரதான சாலையை தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பழுதடைந்த நிலையில் இருந்ததால், கடந்த ஓராண்டிற்கு முன் பல லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், தரமாக இருக்கும் சாலையில், ₹1கி.மீ தொலைவிற்கு ₹92 லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பென்னாகரத்தில் பல சாலைகள் பழுதடைந்து உள்ள நிலையில், இது ேபான்ற தரமான சாலை மீது, மீண்டும் சாலை அமைத்து, பணத்தை கொள்ளையடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது ேபான்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.