புதுச்சேரி, நவ. 23: புதுவையில் 2 சீனியர் எஸ்பிக்கள், 7 எஸ்பிக்களை அதிரடி இடமாற்றம் செய்து கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுவை குற்றம் மற்றும் புலனாய்வு சீனியர் எஸ்பி மகேஷ்குமார் பர்ன்வால் காரைக்கால் சீனியர் எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், புதுச்சேரி வடக்கு எஸ்பி ரக்சனாசிங் போக்குவரத்து தெற்கு மற்றும் மேற்கு பிரிவுக்கும், காரைக்கால் தெற்கு எஸ்பி வம்சீதர ரெட்டி தட்லா புதுச்சேரி போக்குவரத்து கிழக்கு மற்றும் வடக்கு பிரிவுக்கும், மோட்டார் டிராபிக் பிரிவு எஸ்பி வீரவல்லவன் காரைக்கால் தெற்கு பிரிவுக்கும், சிக்மா செக்யூரிட்டி எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் புதுச்சேரி வடக்கு பிரிவுக்கும் (சிக்மா செக்யூரிட்டி கூடுதல் பொறுப்பும்), சிறப்பு பிரிவு எஸ்பி ரங்கநாதன் புதுச்சேரி மேற்கு பிரிவுக்கும் (கூடுதல் பொறுப்பு சிறப்பு பிரிவு), போலீஸ் ஆப் போலீஸ் (பிஓபி) எஸ்பி மாறன் கிழக்கு பிரிவுக்கும், கிழக்கு எஸ்பி வெங்கடசாமி போலீஸ் ஆப் போலீஸ் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கவர்னர் கிரண்பேடியின் உத்தரவை புதுச்சேரி உள்துறை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் நேற்று பிறப்பித்துள்ளார்.
அதேபோல், காரைக்கால் சீனியர் எஸ்பியாக பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி ராகுல்அல்வால், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு சீனியர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு போக்குவரத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவுகளும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கவர்னரின் உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.