×

தர்மபுரியில் அகல் விளக்குகள் விற்பனை ஜோர்

தர்மபுரி, நவ.22: தீபத்திருவிழாவை முன்னிட்டு, தர்மபுரியில் அகல்விளக்குகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. தமிழகத்தில் நாளை (23ம் தேதி) தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி பகுதிகளில் தயாரிக்கப்பட்ட களிமண்ணாலான அகல்விளக்குகள்,  பெரியார் மன்றம், கடைவீதி, நெசவாளர் நகர், பிடமனேரி, குமாரசாமிபேட்டை ஆகிய பகுதிகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. பலவித வடிவங்களில் பீங்கான் விளக்குகள், ஒற்றை அகல்விளக்கு, பெரியவிளக்கு, ஐந்துமுக விளக்கு, தூண்டா விளக்கு என விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. அகல்விளக்குகள் ₹10க்கு 4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருக்கார்த்திகை விழாவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அகல் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags : Jor ,Dharmapuri ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...