×

வீரியங்கோட்டை பொன்.பழனிவேல் சேர்வை இல்ல திருமண விழா எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் நடத்தி வைத்தார்

சேதுபாவாசத்திரம், நவ. 15:  தஞ்சை மாவட்டம் வீரியங்கோட்டை திமுக முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் பொன்.பழனிவேல் சேர்வை இல்ல திருமண விழா முன்னாள் நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடந்தது. சேதுபாவாசத்திரம் ஒன்றிய திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியும், ஒன்றிய அவைத்தலைவருமான வீரியங்கோட்டை பொன்.பழனிவேல் சேர்வை இல்ல திருமண விழா பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில் நடந்தது. பொன்.பழனிவேல் மகள் வழி பேரனும், மகன் வழி பேத்தியுமான  கள்ளம்பட்டி அறிவழகன்- கண்ணகியின் புதல்வனான பொறியாளர் கிருபாகரனுக்கும், பொன்.ப.கண்ணன்- லதா அவர்களின் புதல்வி மதுவதனிக்கும் திருமணத்தை திமுக கழக உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையேற்று நடத்தி வைத்தார். பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் வரவேற்றார்.

மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வக்கீல் ராஜ்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, திருச்சி மண்டல இந்திய தேசிய காங்கிரஸ் பொருப்பாளர் ராஜாத்தம்பி, மதிமுக மாநில துணை பொது செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், அமமுக அமைப்பு செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் பழனிவேல்,
ராஜரத்தினம், பேராவூரணி முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப.சேகர், பேராவூரணி பேரூர் கழக செயலாளர் தனம் கோ.நீலகண்டன், பெருமகளூர் பேரூர் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கோ.சி.அறிவுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Tags : Veerankattai ,
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது