×

தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர், மே 14:தஞ்சாவூரை அடுத்த திட்டை அருகே உள்ள கொண்டவிட்டான்திடல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (38). விவசாய தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய மனைவி காற்று வருவதற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது. மேலும் புழுக்கமாக இருந்ததனால் ரமேசின் மனைவி தனது தங்க சங்கிலியை படுக்கையின் அருகே கழற்றி வைத்திருந்தார். இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து கழற்றி வைத்திருந்த 7 பவுன் நகையை திருடி செல்ல முயன்றார். அப்போது தூக்கம் கலைந்து எழுந்த ரமேஷ் நகையை மர்மநபர் திருடிச் செல்வதை பார்த்து அவரை பிடிக்க முயன்றார். ஆனால் மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Ramesh ,Kondavithanthidal ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் குருதயாள் சர்மா அருகே...