×

முருகன் கோயிலில் திருக்கல்யாண விழா

அரூர், நவ.15: அரூர் மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடந்தது. கடந்த 8ம் தேதி தொடங்கிய விழா விக்னேஷ்வர பூஜை, ஹோம பூஜை ஆகியவற்றுடன் 13ம் தேதி கந்த சஷ்டி விழாவும், மறு நாள் சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. 108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. முல்லைரவி தலைமையில் விழா குழுவினர் செல்வதயாளன், ரமேஷ், சிவபிரகாசம், சிவகுமார், கோட்டீஸ்வரன், பத்மநாபன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Thirukkalai ,festival ,Murugan ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...