×

பாலக்கோடு அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

பாலக்கோடு, நவ.15: பாலக்கோடு அருகே தீக்குளித்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி, குஞ்சம்மாள் தம்பதியரின் மகள் மேனகா(24). இவருக்கும் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி, மேனகா ஜக்கசமுத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் ெசன்றார். தீபாவளி முடிந்தும் அங்கேயே இருந்துள்ளார்.

கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்த அவர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ெசன்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று மேனகா உயிரிழந்தார். இது குறித்து மங்கேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமா என தர்மபுரி ஆர்டிஓ சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.


Tags : balcony ,
× RELATED நானும் பிரபலமாகணும்ல... குழந்தையை வீசி எறிந்த சிறுவன்