திருத்துறைப்பூண்டி நவ.14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் நகர அகமுடையார்கள் சார்பில் 22ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது.நேற்று சூரசம்ஹார விழாவில் காலை சஷ்டி விரத அடியார்களின் பால்குடம் எடுத்தல் பின்னர் பாலாபிஷேகம், தீபாராதனை அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் மேலவீதியில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.