×

காவிரி நதிநீர் பாதுகாப்பு ரத யாத்திரை

கொடுமுடி, நவ.8: கொடுமுடியில் அகில பாரதிய துறவியர் சங்கத்தினரின் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ரத யாத்திரை நடந்தது.  காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் காவிரியை தூய்மை படுத்த அரசு நிதி ஒதுக்கவேண்டும். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும், முதல் கட்டமாக தென்னக நதிகளை காவிரியுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை செல்லும் இந்த காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை சென்ற மாதம் 23ம் தேதியில் இருந்து வருகிற 15ம் தேதி வரை நடக்கிறது. இதில் கொடுமுடிக்கு வந்த ரத யாத்திரை குழுவினர் காவிரி படித்துறையில் காவிரியின் அன்னையின் முழு உருவச்சிலைக்கு ஆராதனைகள் நடத்தி ஆற்றில் பூஜை செய்தனர்.

Tags : Cauvery ,river rath yatra ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி