×

கந்தசஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை தொடக்கம்

தர்மபுரி, நவ.8: கந்தசஷ்டியை முன்னிட்டு குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் லட்சார்ச்சனை இன்று துவங்குகிறது. தர்மபுரி குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் 54வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை பெருவிழா 8ம் தேதி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தினமும் காலை முதல் இரவு வரை லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனைகள் திருமுறை பாராயணத்துடன் நடக்கிறது. லட்சார்ச்சனையின் நிறைவு நாளான வரும் 14ம் தேதி காலை பூர்த்தி ஹோமத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெறுகிறது. இதையடுத்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

 பகல் 1.30 மணிக்கு இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து திருமணக்கோலத்துடன் சிவசுப்ரமணியசுவாமி பொன்மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் செங்குந்த சிவநேய செல்வார்கள் குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Lakshachan ,
× RELATED சீர்காழி அருகே மங்கைமடம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை