×

பார்வதிபுரம் விண்மீன் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

நாகர்கோவில்,நவ.8:  பார்வதிபுரம் நாஞ்சில் நகரில் உள்ள விண்மீன் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஓய்வுபெற்ற ஆய்வாளர் முருகன் (ஐஎஸ்ஆர்ஓ) தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆனிஸ் ரோஜா வரவேற்றார்.
 அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆய்வாளர் முருகன்  வாழ்த்துரை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு தியானப்பயிற்சியும் அளித்தார். இதய நிறைவு தியானப்பயிற்சி நிறுவனம் சார்பில், பிராணாஹூதி பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் ெதாடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளைப் பள்ளி செயல் அலுவலர் எட்வின் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : celebration ,Parvatipuram Starr School ,
× RELATED எதிர்கால தமிழ்நாட்டிற்கான...