×

வீடுகளை அலங்கரிக்கும் குதிரை பொம்மை விற்பனை ஜோர்

தர்மபுரி, நவ.1: தர்மபுரி நகரில் வீடுகளை அலங்கரிக்கும் குதிரை பொம்மைகள் விற்பனை ஜோராக நடக்கிறது. ஆடம்பர வீடுகள் முதல் சாதாரண ஓட்டுவீடுகள் வரை, அலங்காரமாக வைக்கவே அனைவரும் விரும்புவர். இந்நிலையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே குதிரை பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது. இவை சிறுவர்கள் விளையாடும் வகையிலும், வீடுகளை அலங்கரிக்கும் வகையிலும் உள்ளதால், பொதுமக்கள் விரும்பி வாங்கி சென்றனர். இதுபற்றி ஆந்திராவை சேர்ந்த பொம்மை வியாபாரிகள் கூறுகையில், ‘கயிறுகளால் பொம்மையை செய்து அதன் மேல் அழகான வண்ண துணிகள் மூலம் குதிரையை தயாரிக்கிறோம். இவை ₹700க்கு விற்பனை செய்கிறோம். தினமும் 5 முதல் 10 குதிரைகள் வரை விற்பனையாகிறது,’ என்றனர்.

Tags : Horseshoe ,homes ,
× RELATED முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல்...