×

நாகர்கோவிலில் பள்ளி மாணவிகள் இருவர் பலாத்காரம் ‘போக்சோ’ சட்டத்தில் டெம்போ டிரைவர் உட்பட 2 பேர் கைது

நாகர்கோவில், நவ.1: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவிகளை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த டெம்போ டிரைவர் உள்ளிட்ட 2 பேரை இரு வேறு வழக்குகளில் போலீசார் கைது செய்துள்ளனர். பூதப்பாண்டி பகுதியைசேர்ந்த மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு வயது 14. மாணவி இறச்சகுளம் பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் டெம்போ ஓட்டி வரும் புத்தேரியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சந்தோஷ்குமார்(23) என்பவர் மாணவியிடம் வந்து கடந்த 4 மாதங்களாக உன்னை காதலித்து வருகிறேன், திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். மேலும் கடந்த 29ம் தேதி  சந்தோஷ்குமார், மாணவியிடம் எனது அம்மாவை பார்க்க நாளை ஆஸ்பத்திரிக்கு செல்லலாம், மாற்று உடையும் எடுத்துவா என்றும் கூறியுள்ளார்.
அதனை நம்பிய மாணவி நேற்று முன்தினம் பள்ளி செல்வதாக வீட்டில் கூறி சென்றவர், பள்ளிக்கு செல்லவில்லை. இதனையடுத்து பள்ளியில் இருந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  மாணவியின் தாய் மகளை பல இடங்களிலும் தேடி வந்துள்ளார். இதற்கிடையே சந்தோஷ்குமார், மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசி  மருத்துவமனைக்கு செல்லாமல் அறுகுவிளை பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். நண்பரின் வீட்டில் யாரும் இல்லை, அவரது வீட்டின் சாவி சந்தோஷ்குமாரிடம் இருந்துள்ளது.

அங்கு அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாலை 6 மணியளவில் இறச்சகுளம் பஸ் ஸ்டாப்பில் விட்டுவிட்டு சென்று விட்டார்.வீட்டிற்கு வந்ததும் மாணவியின் தாயார் நீ ஏன் பள்ளிக்கு செல்லவில்லை, பள்ளியில் இருந்து போன் வந்தது என்று கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாணவி அழுது கொண்டே நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியை அழைத்துக்கொண்டு அவரது தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு டெம்ேபா டிரைவர் சந்தோஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவி மருத்துவ சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 மாதம் முன்பு மாயமான மாணவிநாகர்கோவிலில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைபள்ளி ஒன்றில் உண்ணாமலைக்கடையை சேர்ந்த மாணவி ஒருவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நாகர்கோவிலில் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் மாணவி திடீரென மாயமானார். அவர் எங்கே சென்றார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சுஜின்(19) என்ற வாலிபர் அழைத்து சென்றது தெரியவந்தது. அவர் மாணவியை சென்னை, கோவை, மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 ஏற்கனவே ஊரில் வாலிபரின் தொல்லை பொறுக்காமல்தான் மாணவியை நாகர்கோவிலில் உள்ள விடுதியில் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற பின்னரும் மாணவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட வாலிபர் அவரை அழைத்து சென்றுள்ளார்.இந்தநிலையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் சுஜினை நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் 2 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nagercoil ,Paxo ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...