×

பழனியாண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

தர்மபுரி, அக்.31: தர்மபுரி அருகே பாடி கிராமத்தில் பழனியாண்டவர் சுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம் பாடி பழனியாண்டவர், வள்ளி-தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 26ம் தேதி காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோபூஜை, தீர்த்தக்குட ஊர்வலம், 4 கால யாக பூஜை, மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமிக்கும், கோபுர கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Great Kumbabhishek Festival ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா