×

அதியமான்கோட்டை அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளை தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி

தர்மபுரி, அக்.31: தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் ஓம் சக்தி வழிபாட்டு மன்ற கோயில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தடங்கம் கிராமத்தில், ஓம் சக்தி வழிப்பாட்டு மன்ற கோயில் உள்ளது. இந்த கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலில் வழிபாடு நடத்த பக்தர்கள் நேற்று சென்றனர். அப்போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, கோயில் உண்டியல் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலை தேடினர். அப்போது கோயிலில் இருந்து 1கி.மீ தொலைவில் உள்ள பதிகால்பள்ளம் பகுதியில் உண்டியல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உண்டிலை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை, தொப்பூர் பகுதியில், கோயிலின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உண்டிய பணத்தை திருடி சென்றனர். இது போன்று கோயில்களில் தொடர்ந்து நடந்து வரும் கொள்ளை சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : temple lock ,Adiyamankottai ,
× RELATED அதியமான்கோட்டை அருகே சிப்காட் அமைக்க...