×

ஓமலூர் வட்டாரத்தில் மதுபானங்களை பதுக்கி விற்ற 18 பேர் கைது

ஓமலூர், அக்.30:  ஓமலூர் வட்டார பகுதிகளில் வீடுகள், முட்புதர்கள், ஏரிகளில் அனுமதியின்றி அதிகாலை முதலே கலப்பட மதுபானங்களை விற்பனை செய்வதாக ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, ஓமலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட 6 காவல்நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய டிஎஸ்பி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தீவட்டிப்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (39), ராஜசேகர் (25), சீனிவாசன் (40), முத்து (42), இளங்கோ (43), ஓமலூர் ேலாகநாதன் (39), அருண் (30), பச்சையப்பன் (44), ரவி, (51), ஜானகி (35), தாரமங்கலம் கருப்புசாமி (33), பழனி (41), குமார், கோவிந்தராஜ், தொளசம்பட்டி ஆறுமுகம் (59), பரமசிவம் (40), நங்கவள்ளி முத்துமாணிக்கம் (63), குருவன் (65) உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Omanur ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமனூர் அருகே...