×

சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

திருப்பரங்குன்றம், அக்.30: சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(23). இவர் மதுரை தெற்குவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் கார்மென்ட்ஸ் கடையில்  வேலை செய்து வருகிறார். இந்த கடையில் ஹார்விபட்டியை சேர்ந்த ரோஸ்(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி துணி வாங்க வந்தார். அப்போது ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டது. ரோஸிடம் ஆசை வார்த்தை கூறி, தஞ்சாவூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு ராஜசேகர் அழைத்து சென்றார். அப்போது  அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது. இது குறித்து ரோஸ் திருப்பரங்குன்றம்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.  வாயில் நுரை தள்ளி நடக்க முடியாமல் சாகின்றன கால்நடைத்துறையிடம் மருந்து இல்லையாம்...

பரமன் கூறும்போது, ‘‘எங்கள் ஊரில் கொத்து கொத்தாக ஆடுகள் செத்து மடிகின்றன. சிகிச்சை அளிக்க தெரியாமல் தவித்து வருகிறோம். அரசு கால்நடை மருத்துவமனையில் இந்த நோயிற்கு மருந்து, மாத்திரை இல்லை என்கின்றனர். இதற்கே மருந்து மாத்திரை இல்லாத இந்த கால்நடை மருத்துவமனை, எதற்கு மருந்து மாத்திரைகள் வைத்திருப்பார்கள் என தெரியவில்லை. இங்கு அதிகமான ஆடுகள் இறக்கும் தருவாயில் உள்ளன. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்துபோன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கி வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் என்னை போன்ற ஆடு வளர்க்கும் ஏழை விவசாயிகளுக்கு அரசு உதவி புரிய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Silk Smith ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...