×

ரேசன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி,  அக். 26: புதுவையில் ரேசன் கடை ஊழியர்களுக்கு கடந்த 16 மாதமாக ஊதியம்  வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் பலகட்ட  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் குடிமை பொருள்  வழங்கல் துறையை முற்றுயைிட்டனர். இருப்பினும் அவர்களின் கோரிக்கை  நிறைவேறவில்லை.
 இந்த நிலையில் நேற்று தலைமை செயலரை சந்தித்து  கோரிக்கையை முறையிட தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் அங்கு  அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து அனைவரும் அங்கேயே  போராட்டத்தை தொடர்ந்தனர்.
 தலைமை செயலகம் அருகே ரோட்டில் அமந்து  100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சட்டசபையில்  அறிவித்தபடி ரேசன் ஊழியர்களை டிசிஎஸ்சில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி அனைவரும் முழக்கமிட்டனர்.

Tags : ration shop staff wait waiter ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...