×

பாகலூர் வனப்பகுதியில் கொன்று எரிக்கப்பட்டவர் அடையாளம் தெரிந்தது

தர்மபுரி, அக்.25: பாகலூர் வனப்பகுதியில் கொலையான நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்    அடையாளம் தெரிந்தது. இதையடுத்து தடயங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன் முகம் சிதைக்கப்பட்டு பாதி எரிக்கப்பட்ட நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். இதையடுத்து சடலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டது. தொடர்ந்து எரிக்கப்பட்டவர் யார் என்பது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், சடலமாக மீட்கப்பட்டவர் கிருஷ்ணகிரி அடுத்த பாகலூர் ஜி.மங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(45) என்பதும் இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தர்மபுரி மருத்துவம் சார்ந்த மருத்துவக்குழு, டாக்டர் மதன்ராஜ் மற்றும் பாகலூர் போலீசார் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். அப்போது, பிரகாஷின் இரண்டு பல் மற்றும் சட்டை பட்டன்கள் சேகரிக்கப்பட்டது. அதனை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்துள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : victim ,forest area ,Bagalur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்