×

அரசனூரில் இன்று மின்தடை

சிவகங்கை, அக். 25: சிவகங்கை அருகே அரசனூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அரசனூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி அரசனூர், இலுப்பக்குடி, திருமாஞ்சோலை, படமாத்தூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரி, மைக்கேல்பட்டணம், பில்லூர், பெத்தனேந்தல், களத்தூர், ஏனாதி உட்பட இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு உதவி பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags :
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்