×

நீண்ட இழுபறிக்கு பிறகு பிடமனேரி பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு தலைவர் தேர்வு

தர்மபுரி, அக்.23: தர்மபுரி பிடமனேரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் பதவிக்கு, நீண்ட இழுபறிக்கு பின் நேற்று தேர்தல் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தர்மபுரி பிடமனேரியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில், 800 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த உறுப்பினர்கள் மூலம் 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவர், துணை தலைவர் தேர்வு செய்வதில் கடும்போட்டி நிலவியது. நீண்ட நாட்களாக இழுபறி ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில், கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் ஒரு தலைவரும், ஆளும் கட்சி அதிகாரத்தில் ஒரு தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். யார் தலைவர் இருக்கையில் அமர்வது என போட்டி ஏற்பட்டது. இறுதியாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நியாயமாகவும், நேர்மையாகவும் தலைவர் பதவி தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று, முறைப்படி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் தலைவராக சுந்தரராஜன், துணைத்தலைவராக சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று பதவியேற்ற இருவருக்கும் இயக்குனர் பச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : milk manufacturer ,Piedmaniary ,
× RELATED பால் உற்பத்தியாளர் சங்க கூட்டம்