தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்ட பாட்டாளி இளம்பெண்கள் சங்க பொறுப்புக்கு, மாணவர்கள் மற்றும் இளம்பெண்களிடம் பாமக தலைவர் ஜி.கே.மணி விருப்ப மனுக்களை பெற்றார். தர்மபுரி மாவட்ட பாமக அலுவலகத்தில், மாணவர் சங்கம் மற்றும் பாட்டாளி இளம்பெண்கள் சங்கத்திற்கு, மாவட்டத்திற்குட்பட்ட பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே.மணி, இளம்பெண்கள், மாணவர் சங்கத்திற்கான விருப்ப மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார். பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, பாட்டாளி மாணவர் சங்க மாநில செயலாளர் வக்கீல் விஜயராசா ஆகியோரும் விருப்ப மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.