×

பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

புவனகிரி, அக். 17: புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் தீர்த்தனகிரி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தீர்த்தனகிரி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(34) என்பதும், பைக்கில் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பைக்கையும், 10 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Tags :
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பயங்கரம் இடப்பிரச்னையில் முதியவர் அடித்து கொலை