×

புளுதியூர் சந்தையில் ரூ26 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், அக்.11:  அரூர் அருகே கோபிநாதம்பட்டி பூளுதியூர் சந்தையில், ரூ26லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில், வாரந்தோறும் சுமார் 180க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது. இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில், மாட்டின் விலை ரூ21 ஆயிரம் முதல் ரூ40,500 வரையும், ஆடு ரூ2900 முதல் ரூ8 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் ரூ26லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, மாடுகள் அதிக அளவில் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா