×

கணவன், மாமியார் மீது வழக்கு கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை

நாகர்கோவில், அக்.11:  நாகர்கோவில், கோட்டார், கலைநகர் பகுதியை சேர்ந்தவர் சிவலட்சுமி(38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கமணி(40) என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் நகைகள், மாப்பிள்ளைக்கு 4 பவுன் செயின் போன்றவற்றை அளித்துள்ளனர்.  அதன் பின்னர் கணவர் தங்கமணி, மாமியார் தவமணி, மாமனார் தங்கப்பன் உள்ளிட்டோர் தனது பணம் மற்றும் நகைகளை அபகரித்துவிட்டு கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டை விட்டு விரட்டியதாகவும் சிவலட்சுமி குமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அந்த புகார் மனு அடிப்படையில் தங்கமணி, தவமணி, தங்கப்பன் ஆகியோர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Husbands ,
× RELATED ‘மருதமலை’ படத்தில் வரும் வடிவேல்...