×

விற்பனை மும்முரம் சர்வதேச டேக்வாண்டோ நடுவராக திண்டுக்கல்லை சேர்ந்தவர் தேர்வு

திண்டுக்கல், அக். 9: சர்வதேச டேக்வாண்டோ நடுவர் தேர்வு செப். 24ம் தேதி முதல் அக்.1ம் வரை மும்பையில் நடந்தது. இதில் ஐரோப்பா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 140 நடுவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 5 பேர் பங்கேற்றனர். உடல்தகுதி, ஓட்டப்பந்தையம், எழுத்துத்தேர்வு, செய்முறை பயிற்சி உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன. இதில் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் சர்வதேச நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு ப்ளை கிக், ப்ரி ஸ்டைல் உள்ளிட்ட புதிய வகை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரேம்நாத், தஞ்சாவூரை சேர்ந்த ஜான் டி பிரிட்டோ ஆகியோர் டெக்னிக்கல், தகுதி தேர்விற்கான சான்றிதழ்களை பெற்றுள்ளனர். சர்வதேச நடுவராக தேர்வாகன பிரேம்நாத்தை திண்டுக்கல் டேக்வாண்டோ சங்க செயலாளர் டிட்டோ, துணை தலைவர் கண்ணன், துணை செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags : dentist ,Mumumur International ,referee ,
× RELATED கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில்...