×

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தி தகுதியிழப்புக்கு எதிராக கடந்த 26ம் தேதி இந்தியா முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது.‌ அடுத்த கட்டமாக ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.15ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்தும் மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. 20ம் தேதிவரை தொடர் போராட்டங்கள் நடைபெறவுள்ளது.  

ஆருத்ரா நிறுவனத்தில் மிகப்பெரிய ஊழலை நடந்துள்ளது. இதற்குப் பின்னால் மத்திய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா இருக்கிறது. முதலீடு செய்தவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு பின்னணி இருக்கிறது என்ற  நம்பிக்கையில்  முதலீடு செய்தோம் என கூறினர். தமிழ்நாடு அரசும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாஜக தலைவர் அண்ணாமலையை நேரடியாக அழைத்து விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கையை வைக்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Rahul Gandhi ,Tamilnadu ,K.S.Azhagiri , Rahul Gandhi's disqualification issue protest across Tamil Nadu K.S.Azhagiri announcement
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...