சென்னை: மக்கள் நலன் மீது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு அக்கறை இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். மக்கள் நலன் மீது அக்கறை இருந்திருந்தால் முழு பட்ஜெட்டை கேட்டு அதன் பின் கருத்து தெரிவித்து இருக்கலாம். திமுகவின் தொடர் வெற்றிகளை பொறுத்து கொள்ளாமல் பழனிச்சாமி கருத்துகளை கூறி வருகிறார் என அவர் கூறினார்.